
தனது தங்கையின் திருமணத்திற்கு தனது நண்பர்களை சென்னையிலிருந்து கூட்டிச் செல்கிறார். போகும் போது தனது மாவட்டத்தின் வரலாற்றைச் சொல்ல ஆரம்பித்து விடுகிறார் வினோத். அங்குள்ள சிறப்புகள், பார்க்க வேண்டிய இடங்கள், ஆங்கிலேயர் ஆட்சி செய்தபோது உள்ள நினைவுச் சின்னங்கள், மன்னர்கள் அரண்மனைகள், அங்குள்ள உணவு முறைகள் மக்களால் கொண்டாடப்படும் விழாக்கள் என்று எல்லாவற்றையும் எடுத்துச் சொல்கிறார்.