பாடல் : 46
கேவல நிலைதோன் றாமல் கெடுத்தது பஞ்ச கோசம்,
சீவனும் சகத்தும் ஆகிச் செனித்தவிட் சேபம் அன்றோ,
ஆவர ணம்தா னேபாழ் அனர்த்தம்என் றுரைத்த தேதோ,
மேவரும் குருவே என்று வினாவிடின் மகனே கேளாய்.
பாடல் : 47
தோற்றமாம் சத்தி தானும் துன்பமாம் பவமா னாலும்,
ஆற்றலால் முத்தி சேர்வார்க் கனுகூலம் ஆகும் காண்நீ,
ஊற்றமாம் பகற்கா லம்போல் உபகாரம் நிசியால் உண்டோ,
மாற்றம்என் உரைப்பேன் மைந்தா மறைப்பது மிகப்பொல் லாதே.
பாடல் : 48
சுழுத்தியில் பிரள யத்தில் தோற்றம் ஆம் சகங்கள் மாண்டும்,
அழுத்திய பவம்போய் முத்தி அடைந்தவர் ஒருவர் உண்டோ,
முழுத்தவிட் சேபம் எல்லாம் முத்தியில் கூட்டு கிற்கும்,
கொழுத்த ஆ வரணம் முத்தி கூடாமல் கெடுத்த கேடே.
பாடல் : 49
சுத்தியில் வெள்ளி போலத் தோன்றிய தோற்றம் ஆன,
சத்தியும் பொய்யே என்றால் சத்திசா தனமா வந்த,
முத்தியும் பொய்யாம் என்னின் மோகநித் திரைவி லங்கால்,
நித்திரை தெளியு மாபோல் நிருவாண நிலைமெய் யாமே.
பாடல் : 50
இம்பரில் நஞ்சை நஞ்சால் இரும்பினை இரும்பால் எய்யும்,
அம்பினை அம்பால் பற்றும் அழுக்கினை அழுக்கால் மாய்ப்பர்,
வம்பியல் மாயை தன்னை மாயையால் மாய்ப்பர் பின்னைத்,
தம்பமாம் அதுவும் கூடச் சவம்சுடு தடிபோல் போமே.
Show more...