Home
Categories
EXPLORE
Comedy
True Crime
Society & Culture
History
Business
News
Sports
About Us
Contact Us
Copyright
© 2024 PodJoint
00:00 / 00:00
Sign in

or

Don't have an account?
Sign up
Forgot password
https://is1-ssl.mzstatic.com/image/thumb/Podcasts126/v4/f4/0b/6a/f40b6a34-1f5b-73b3-52b4-69f60f6c6695/mza_6728906705376041904.jpg/600x600bb.jpg
பொதிகைச் சாரல்
Jaya Ram
284 episodes
6 days ago
கம்பராமாயணம்... காண்டம்-யுத்த காண்டம் படலம் -இராவணன் சோகப் படலம் . பாடல் எண் -612 நாள் -அறுநூற்று பன்னிரெண்டாம் நாள். கூற்றம் உன் எதிர் வந்து உயிர் கொள்வது ஓர் ஊற்றம்தான் உடைத்து அன்று எனையும் ஒளித்து ஏற்ற எவ் உலகு உற்றனை? எல்லை இல் ஆற்றலாய் என்று உரைக்கும் அங்கு ஓர் தலை . விளக்கம் -எல்லை இல்லாத வல்லமையை உடையவனே கூற்று உன் எதிரில் வந்து உனது உயிரைக் கொள்ளத் தக்க மிகுவலி உடையது அன்று ஆதலால் நீ இறந்திருக்க மாட்டாய் உனக்கு ஏற்ற எந்த உலகத்துக்கோ சென்றிருக்கின்றாய் எனக்கு தெரியாமல் மறைந்து உனக்கு ஏற்ற எந்த உலகத்தை அடைந்தாய் என்று வினவும் அங்கு ஒரு தலை . கு.பாஸ்கர் ....... அபுதாபி
Show more...
Books
Arts
RSS
All content for பொதிகைச் சாரல் is the property of Jaya Ram and is served directly from their servers with no modification, redirects, or rehosting. The podcast is not affiliated with or endorsed by Podjoint in any way.
கம்பராமாயணம்... காண்டம்-யுத்த காண்டம் படலம் -இராவணன் சோகப் படலம் . பாடல் எண் -612 நாள் -அறுநூற்று பன்னிரெண்டாம் நாள். கூற்றம் உன் எதிர் வந்து உயிர் கொள்வது ஓர் ஊற்றம்தான் உடைத்து அன்று எனையும் ஒளித்து ஏற்ற எவ் உலகு உற்றனை? எல்லை இல் ஆற்றலாய் என்று உரைக்கும் அங்கு ஓர் தலை . விளக்கம் -எல்லை இல்லாத வல்லமையை உடையவனே கூற்று உன் எதிரில் வந்து உனது உயிரைக் கொள்ளத் தக்க மிகுவலி உடையது அன்று ஆதலால் நீ இறந்திருக்க மாட்டாய் உனக்கு ஏற்ற எந்த உலகத்துக்கோ சென்றிருக்கின்றாய் எனக்கு தெரியாமல் மறைந்து உனக்கு ஏற்ற எந்த உலகத்தை அடைந்தாய் என்று வினவும் அங்கு ஒரு தலை . கு.பாஸ்கர் ....... அபுதாபி
Show more...
Books
Arts
Episodes (20/284)
பொதிகைச் சாரல்
கம்பராமாயணம்... காண்டம்-யுத்த காண்டம் படலம் -இராவணன் சோகப் படலம் . பாடல் எண் -612 நாள்
கம்பராமாயணம்... காண்டம்-யுத்த காண்டம் படலம் -இராவணன் சோகப் படலம் . பாடல் எண் -612 நாள் -அறுநூற்று பன்னிரெண்டாம் நாள். கூற்றம் உன் எதிர் வந்து உயிர் கொள்வது ஓர் ஊற்றம்தான் உடைத்து அன்று எனையும் ஒளித்து ஏற்ற எவ் உலகு உற்றனை? எல்லை இல் ஆற்றலாய் என்று உரைக்கும் அங்கு ஓர் தலை . விளக்கம் -எல்லை இல்லாத வல்லமையை உடையவனே கூற்று உன் எதிரில் வந்து உனது உயிரைக் கொள்ளத் தக்க மிகுவலி உடையது அன்று ஆதலால் நீ இறந்திருக்க மாட்டாய் உனக்கு ஏற்ற எந்த உலகத்துக்கோ சென்றிருக்கின்றாய் எனக்கு தெரியாமல் மறைந்து உனக்கு ஏற்ற எந்த உலகத்தை அடைந்தாய் என்று வினவும் அங்கு ஒரு தலை . கு.பாஸ்கர் ....... அபுதாபி
Show more...
1 year ago
7 minutes 12 seconds

பொதிகைச் சாரல்
சிறார் கதைகள்
நூல் : அண்டா மழை ஆசிரியர் : உதயசங்கர் பதிப்பகம் : வானம் கதை சொல்பவர் : பூங்கொடி பாலமுருகன்
Show more...
1 year ago
6 minutes 59 seconds

பொதிகைச் சாரல்
சிறார் கதைகள்
நூல் :அந்தியில் மலர்ந்த மொட்டுகள், தொகுத்தவர்: உமையவன், கதையாசிரியர் ரமணி, பதிப்பகம்: நிவேதிதா பதிப்பகம், கதை சொல்பவர்: கார்த்திகா கவின் குமார்
Show more...
1 year ago
4 minutes 56 seconds

பொதிகைச் சாரல்
சிறார் கதைகள்
கதை - பட்டாம்பூச்சிகள் எங்கே? எழுத்தாளர் - விஷ்ணுபுரம் சரவணன் புத்தகம் - வித்தைக்காரச்சிறுமி பதிப்பகம் - வானம் கதைசொல்லி - உதயசங்கர்
Show more...
1 year ago
8 minutes 1 second

பொதிகைச் சாரல்
சிறார் கதைகள்
நூல் : ஒரு பூ ஒரு பூதம் ஆசிரியர் : மருதன் பதிப்பகம் : வானம் கதை சொல்லி : சரிதாஜோ
Show more...
1 year ago
7 minutes 52 seconds

பொதிகைச் சாரல்
சிறார் கதைகள்
புத்தகம்: தாத்தா சட்டை கதை : உருவத்தில் என்ன இருக்கிறது? எழுத்தாளர்: யெஸ். பாலபாரதி பதிப்பகம்: பாரதி புத்தகாலயம் கதைசொல்லி : சங்கீதா பிரகாஷ்
Show more...
1 year ago
9 minutes 47 seconds

பொதிகைச் சாரல்
சிறார் கதைகள்
நூல் : குட்டிப் பாப்பாவின் அற்புத உலகம் ஆசிரியர் : உதயசங்கர் பதிப்பகம் : சுவடு கதை சொல்பவர் : பூங்கொடி பாலமுருகன்
Show more...
1 year ago
11 minutes 15 seconds

பொதிகைச் சாரல்
சிறார் கதைகள்
நூல் :இங்கிலீஷ் தவளை, நூலாசிரியர்: ஆயிஷா இரா.நடராசன் பதிப்பகம் :பாரதி புத்தகாலயம், கதை சொல்பவர்: கார்த்திகா கவின் குமார்
Show more...
1 year ago
5 minutes 48 seconds

பொதிகைச் சாரல்
சிறார் கதைகள்
கதை - சக்கு எழுத்தாளர் - கதைசொல்லி சதீஷ் புத்தகம் - கதை வண்டி கதைசொல்லி - உதயசங்கர்
Show more...
1 year ago
10 minutes 50 seconds

பொதிகைச் சாரல்
சிறார் கதைகள்
நூல் : மூக்கு நீண்ட குருவி ஆசிரியர் : கன்னி கோவில் ராஜா பதிப்பகம் : வானம் கதைசொல்லி : சரிதா ஜோ
Show more...
1 year ago
8 minutes 31 seconds

பொதிகைச் சாரல்
சிறார் கதைகள்
நூல் : அலைகளின் அம்மா யாரு? நூலாசிரியர்: கொ.மா.கோ. இளங்கோ, பதிப்பகம்: வானம், கதை சொல்பவர்: கார்த்திகா கவின் குமார்
Show more...
1 year ago
8 minutes 12 seconds

பொதிகைச் சாரல்
கம்பராமாயணம் 585
கம்பராமாயணம்.. கருடன் இராமனைத் துதித்தல்... காண்டம் -யுத்த காண்டம். படலம் -நாகபாசப் படலம். பாடல் எண் -585 நாள் -ஐந்நூற்று எண்பத்து ஐந்தாவது நாள் . எறிந்தாரும்,ஏறுபடுவாறும்,இன்ன பொருள் கண்டு இரங்குபவரும் செறிந்தாரின் உண்மை எனல் ஆய தன்மை தெரிகின்றது ,உள்ளது இடையே பிறிந்தார் பிறிந்த பொருளோடு போதி பிறியாது நிற்றி பெரியோய் அறிந்தார் அறிந்த பொருள் ஆதி ஆர் இல் அதிரேக மாயை அறிவார் ?. விளக்கம் -பெரியவனே -படைக்கலன்களை எறிபவரும்,அதனால் காயப் படுபவர்களும்,இத்தகைய செயலைக் கண்டு இரங்குபவரும் ,நெருங்கி இருந்து வாழ்பவர்கள் இடத்திலும் நீ ஒருங்கு கலந்திருப்பது உண்மை என்ற செய்தி உன்னில் தெரிகின்றது.அறிவில் இருந்து பிரிந்தவர்கள் நீக்கியுள்ள ஞானமாகிய பொருளுடன் நீயும் அவர்களிடம் இருந்து பிரிந்து போகிறாய் , அவ்வாறு பிரிந்தாலும் கூட அந்தர்மியாகப் பிரியாமல் இருக்கிறாய் ,தத்துவ ஞானிகள் உண்மை உணர்வால் ஆய்ந்து அறிந்த மெய் பொருளாகவும் விளங்குகிறாய் இந்த மிகுதியான மாயையை யார் அறிவார்?. கு.பாஸ்கர் ....... அபுதாபி
Show more...
1 year ago
7 minutes 1 second

பொதிகைச் சாரல்
கம்பராமாயணம் 584
கம்பராமாயணம்.. கருடன் இராமனைத் துதித்தல்.. காண்டம்-யுத்த காண்டம். படலம்-நாகபாசப் படலம். பாடல் எண்.584 நாள் -ஐந்நூற்று எண்பத்து நான்காவது நாள். வினை வர்க்கம் முற்றும் உடனே படைத்தி அவை எய்தி என்றும் விளையா நினைவர்க்கு நெஞ்சின் உறு காமம் முற்றி அறியாமை நிற்றி மனமா முனைவர்க்கும் ஒத்தி ,அமரர்கும் ஒத்தி, முழுமூடர் என்னும் முதலானோர் அனைவர்க்கும் ஒத்தி, அறியாமை ஆர் இல் அதிரேக மாயை அறிவார் ?. விளக்கம். உயிர்களின் பாவ புண்ணியங்களாகிய இரு வினைகளுக்கு தகுந்தவாறு அந்த உயிர்களை உடனே தக்க உடல் எடுக்கச் செய்து அந்த உடம்புகளை அடைந்து உன் திருவடிகளையே நினைக்கும் பக்தர்களுக்கு எப்போதும் அவர்கள் மனதில் உள்ள விருப்பங்களை நிறைவேற்றி அறியாமல் நிற்கின்றாய் , முனிவர்களுக்கும் , தேவர்களுக்கும் மனமாக விளங்குகிறாய் ,முழு அறிவிலிகள் என்னும் மற்ற பிறருக்கும் அறியமுடியாதவனாக இருக்கிறாய் இந்த மாயச் செயலைச் யார் அறிவார்.... கு.பாஸ்கர் ... அபுதாபி
Show more...
1 year ago
6 minutes 54 seconds

பொதிகைச் சாரல்
கம்பராமாயணம் 583
கம்பராமாயணம்... கருடன் இராமனை துதித்தல். காண்டம் - யுத்த காண்டம். படலம் - நாகபாசப் படலம். பாடல் எண் - 583. நாள் - ஐந்நூற்று எண்பத்துமூன்றாவது நாள். மீளாத வேதம், முடிவின்கண், நின்னை மெய்யாக மெய்யின் நினையும் கேளாத என்று பிற என்று சொன்ன கெடுவார்கள் சொன்ன கடவான் மாளாத நீதி இகழாமை நின் கண் அபிமானம் இல்லை வறியோர் ஆளாயும் வாழ்தி, அரசாள்தி, ஆர், இவ் அதிரேக மாயை அறிவார். விளக்கம் - மெய்யில் இருந்து விலகி மீளுதல் இல்லாத வேதங்களின் முடிபொருளாய் உள்ள வேதச் சிகையாய் விளங்கும் உபநிடதங்கள் உன்னைப் பற்றி கூறும் இடத்து உண்மைப் பொருளாகக் கொண்டு உண்மை மெய்யுணர்வாகிய பதிஞானத்தால் ஆய்ந்து கூறும் அவ்வாறு இருக்கும் போது நான் கடவுளைக் கண்டேன் என்று ஒருவர் கூறும் கூற்று கேள்விப் படாத கூற்று எனவும் இக் கூற்று வேறு காரணத்திற்காக கூறப்பட்டது (கடவுள் உண்மையில் இல்லை) என்றும் கூறுகிற கூற்று அறிவில்லாத நாத்திகர்கள் சொன்னதாகும், தாங்கள் கூறிய கூற்றினைக் கடவாது அவர்கள் ஒரு போதும் பழுதுபடாத, சாத்திர, நீதி முறை பழுதுபடாமலும், உன்னிடம் பக்தி செலுத்தாமலும் கெட்டு அழிவார்கள், ஆனால் நீயோ பத்துடை அடியவர்க்கு எளிய ஏவல் ஆளாகவும் வாழ்கிறாய், அனைத்து உலகங்களையும் அரசாள்கிறாய், இந்த மாயச் செயலை யார் அறிவார்... கு. பாஸ்கர்.... அபுதாபி
Show more...
1 year ago
6 minutes 45 seconds

பொதிகைச் சாரல்
கம்பராமாயணம் 582
கம்பராமாயணம்.... கருடன் இராமனை துதித்தல்.. காண்டம் - யுத்த காண்டம். படலம் - நாகபாசப் படலம். பாடல் எண் - 582 நாள் - ஐந்நூற்று எண்பத்திரண்டாவது நாள். வாணாள் அளித்தி முடியாமல் நீதி வழுவாமல் நிற்றி மறையோய் பேணாய் உனக்கு ஓர் பொருள் வேண்டும் என்று பெறுவான் அருத்தி பிழையாய் ஊண் ஆய், உயிர்க்கும் உயிர் ஆகி நிற்றி உணர்வு ஆய பெண்ணின் உரு ஆய் ஆண் ஆகி மற்றும் அலி ஆதி ஆர் இவ் அதிரேக மாயை அறிவார்?. விளக்கம் - வேத வடிவானவனே உலகில் உள்ள உயிர்களுக்கெல்லாம் வினைக்குத் தகுந்த வாழ்நாளைக் கொடுக்கிறாய், எக்காலத்தும் அழியாமல், அறம் தவறாமல் நிற்கிறாய், குறைவிலா நிறைவாக இருப்பதால் உனக்கு வேறு பொருள் வேண்டும் என்று இல்லை, பிறர் பெறுவதற்கு விரும்பும் பொருளை தவறாமல் கொடுப்பாய்,, நுகர் பொருளாகவும், உயிருக்கு உயிராகவும், ஐம்புல உணர்வுகளுக்கு அரிய ஆய பெண்ணின் உருவாகியும்,, ஆணின் வடிவமாகியும், அலியின் வடிவமாக வும் நிற்கிறாய் இந்த அரிய மாயச் செயலை அறிபவர் யார்.. கு. பாஸ்கர்.... அபுதாபி
Show more...
1 year ago
7 minutes 4 seconds

பொதிகைச் சாரல்
கம்பராமாயணம் 581
கம்பராமாயணம்... கருடண் இராமனைத் துதித்தல்.. காண்டம் - யுத்த காண்டம். படலம் - நாகபாசப் படலம். பாடல் எண் - 581 நாள் - ஐந்நூற்று எண்பத்தொன்றாவது நாள். தேவாதிதேவர் பலராலும் முந்து திருநாமம் ஓது செயலோய் மூவாது எந் நாளும் உலகு ஏழொடு ஏழும் அரசாளும் மேன்மை முதல்வா மேவாத இன்பம் அவை மேவி மேவ நெடு வீடு காட்டு அம் முடியாய் ஆவாய் வருந்தி அழிவாய் கொல் ஆர் இல் அதிரேக மாயை அறிவார்?. விளக்கம் - தேவர், பிரமன், உருத்திரன் முதலிய தலைமைத் தேவர்கள் போன்ற பலரும் ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு நின் திருநாமத்தை சொல்லித் துதிக்கும் படியாக உள்ளவனே மூப்படையாது எப்போதும் பதிநான்கு உலகங்களையும் பாதுகாத்து அரசு செய்கிற மேன்மை பொருந்திய தலைவனே உன்னை சரண் புகுந்தவர் பிறரால் அடைய முடியாத பேரின்பங்களை அடைந்து இறுதியில் உன்னை அடைய முத்தி உலகத்தை காட்டும் தலைவனாகிய நீ வருத்தம் கொண்டு அழிவாய் போலும் இந்த உன்னுடைய மிகுதியான மாயச் செயலை அறியத் தக்கவர் யார்?. கு. பாஸ்கர்... அபுதாபி
Show more...
1 year ago
7 minutes 4 seconds

பொதிகைச் சாரல்
கம்பராமாயணம் 580
கம்பராமாயணம். வீடணன் நிகழ்ந்தது கூறல்.. காண்டம் - யுத்த காண்டம்.. படலம் - நாகபாசப் படலம். பாடல் எண் 580 நாள் - ஐந்நூற்று எண்பதாவது நாள். பின்னரும் எழுந்து பேர்த்தும் வணங்கி எம் பெரும யாரும் இன் உயிர் துறந்தார் இல்லை, இறுக்கிய பாசம் இற்றால் புல் நுனைப் பகழிக்கு ஓயும் தரத்தரோ? புலம்பி உள்ளம் இன்னலுற்று அயரல் வெல்லாது அறத்தினைப் பாவம் என்றான்.. விளக்கம் - விடணன் எழுந்து நின்று வணங்கி எங்கள் தலைவனே இவர்களில் எவரும் தங்கள்இனிய உயிரை விட்டுவிடவில்லை, இறுகப் பிணைத்துள்ள நாகபாசம் நீங்கினால் உயிருடன் எழுவர் இவர்கள் புன்மையான முனையுடைய அம்புகளுக்கு வலி கெடும் தன்மையுடையவர்களா? புலம்பி வருந்தாதே அறத்தினைப் பாவம் எக்காலமும் வெற்றி கொள்ளாது என்றான்.. கு. பாஸ்கர்.... அபுதாபி
Show more...
1 year ago
6 minutes 10 seconds

பொதிகைச் சாரல்
கம்பராமாயணம் 577
கம்பராமாயணம்... இலக்குவன் நிலை கண்டு வீடணன் புலம்பல். காண்டம் - யுத்த காண்டம். படலம் - நாகபாசப் படலம். பாடல் எண் - 577 நாள் - ஐந்நூற்று எழுபத்தேழாவது நாள். ஒத்து அலைத்து ஒக்க வீடி உய்வினும் உய்வித்து உள்ளம் கைத்தலை நெல்லி போலக் காட்டிலேன் கழிந்தும் இல்லேன் அத் தலைக்கு அல்லேன் யான், ஈண்டு அபயம் என்று அடைந்து நின்ற இத் தலைக்கு அல்லேன் அல்லேன் இரு தலைச் சூலம் போல்வேன். விளக்கம் - வானர வீரர்களுடன் ஒப்பாகப் பகைவர்களை வருத்தி அவர்கள் இறக்கும் நிலை வரின் நானும் அவர்களுக்கு ஒப்பாக இறந்து, வாழ்ந்து உய்யும் நெறிகள் இருப்பின் யானும் பிழைத்து அவர்களையும் பிழைப்பித்து என் பக்தியுள்ள மனத்தின் தன்மையை உள்ளங்கை நெல்லிக்கனி போல விளக்கிக் காட்டினேன் அல்லன் யான் இறந்து போகவுமில்லை, நான் இராவணன் பக்கத்துக்கு வைண்டாதவனானேன், இங்கு சரண் என்று சேர்ந்து நின்ற இராமன் பக்கத்துக்கும் வேண்டாதவனானேன் இரண்டு பிரிவாக உள்ள சூலத்தைப் போன்றவனானேன்... கு. பாஸ்கர்.... அபுதாபி
Show more...
1 year ago
6 minutes 59 seconds

பொதிகைச் சாரல்
கம்பராமாயணம் 576
கம்பராமாயணம்.. நாகபாசத்தால் கட்டுண்டவர் நிலை. காண்டம் - யுத்த காண்டம். படலம் - நாகபாசப் படலம். பாடல் எண் - 576 நாள் - ஐந்நூற்று எழுபத்தாறாவது நாள். ஆயிரம் கோடி மேலும் அம்பு தன் ஆகத்தூடு போயின போதும் ஒன்றும் துடித்திலன் பொடித்து மானத் தீ எரி சிதறும் செங் கண் அஞ்சனை சிங்கம் தெய்வ நாயகன் தம்பிக்கு உற்ற துயர் சுட நடுங்குகின்றான்.. விளக்கம் - மான உணர்வினால் தீப்பொறி சிதறுகின்ற சிவந்த கண்களை உடைய அஞ்சனை பெற்ற சிங்கம் போன்றவனாகிய அனுமன் ஆயிரம் கோடி அம்புகள் தன் மார்பினுள் ஊடுருவிய போதிலும் ஒரு சிறிதும் வருத்தம் அடையவில்லை ஆனால் இலக்குவனுக்கு நேர்ந்த துன்பம் தன் நெஞசைச் சுட மன நடுக்கம் கொண்டான்... கு. பாஸ்கர்... அபுதாபி
Show more...
1 year ago
6 minutes 43 seconds

பொதிகைச் சாரல்
கம்பராமாயணம் 575
கம்பராமாயணம்... இந்திரசித்தன் கவசத்தை இலக்குவன் பிளத்தல் காண்டம் - யுத்த காண்டம். படலம் - நாகபாசப் படலம். பாடல் எண் - 575 நாள் - ஐந்நூற்று எழுபத்தைந்தாவது நாள். நொய்தினின் சென்று கூடி இராவணி உளைவை நோக்கி வெய்தினின் கொன்று வீழ்ப்பல் என்பது ஓர் வெகுளி வீங்கி பெய்துழிப் பெய்யும் மாரி அனையவன் பிணங்கு கூற்றின் கையினின் பெரிய அம்பால் கவசத்தை கழித்து வீழ்த்தான்.. விளக்கம் - பெய்த இடத்தில் பெய்யும் மழையை ஒத்தவன் ஆகிய இலக்குவன் விரைவாகச் சென்று நெருங்கி இராவணன் மகனாகிய இந்திரசித்தன் தளர்ச்சியடைந்த தன்மை கண்டு இவனை யான் விரைவாகக் கொன்று வீழ்த்துவேன் என்று ஒப்பற்ற சினம் மிகுந்து மாறுபாடு கொண்ட இயமனைப் போன்ற தனது கையில் உள்ள வில்லில் பூட்டிய பெரிய அம்புகளால் அவனது கவசத்தை அறுத்து வீழ்த்தினான்.. கு. பாஸ்கர்.... அபுதாபி
Show more...
1 year ago
6 minutes 18 seconds

பொதிகைச் சாரல்
கம்பராமாயணம்... காண்டம்-யுத்த காண்டம் படலம் -இராவணன் சோகப் படலம் . பாடல் எண் -612 நாள் -அறுநூற்று பன்னிரெண்டாம் நாள். கூற்றம் உன் எதிர் வந்து உயிர் கொள்வது ஓர் ஊற்றம்தான் உடைத்து அன்று எனையும் ஒளித்து ஏற்ற எவ் உலகு உற்றனை? எல்லை இல் ஆற்றலாய் என்று உரைக்கும் அங்கு ஓர் தலை . விளக்கம் -எல்லை இல்லாத வல்லமையை உடையவனே கூற்று உன் எதிரில் வந்து உனது உயிரைக் கொள்ளத் தக்க மிகுவலி உடையது அன்று ஆதலால் நீ இறந்திருக்க மாட்டாய் உனக்கு ஏற்ற எந்த உலகத்துக்கோ சென்றிருக்கின்றாய் எனக்கு தெரியாமல் மறைந்து உனக்கு ஏற்ற எந்த உலகத்தை அடைந்தாய் என்று வினவும் அங்கு ஒரு தலை . கு.பாஸ்கர் ....... அபுதாபி